Thursday 2 January 2014

Tagged Under: , , , ,

எத்தனை பேர் அப்பாவிடம் மனம் விட்டு பேசுகிறோம்??

By: Unknown On: 22:36
  • Share The Gag



  • நம்மில் எத்தனை பேர்
     அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்??



    சரி,இது ரொம்ப
     கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர்
     அம்மாவிடம் பேசும்
    அளவிற்க்கு அப்பாவிடம்
     பேசுகிறோம்???.


    அட்லீஸ்ட் அதில்
     பாதி??
    ஹ்ம்ம்ம் ,மனம் இந்த
     கேள்வியை ஏற்க்க
     மறுக்கிறதா????


    நம் அம்மா கர்பிணியாக இருக்கும்
     பொழுது,அவள் எடுக்கும்
     வாந்தியை தன் கையில் ஏந்தும் அப்பா.


    அம்மா மகபேறு காலத்தில் சாப்பிடும்
     ஒவ்வொரு பருக்கும் தன்
     குழந்தை செழிப்பாக
     பிறக்க ,என்று உணரும் நம் அப்பா ,நம்
     அம்மா கேட்ட அனைத்தும்
     வாங்கி தருகிறார்,அப்பொழுதே அவர்
     நமக்காக வாழ ஆரம்பிக்கிரார்.


    7ஆம் மாதத்தில் தாய் வீடு செல்லும் நம்
     அம்மா ,அப்பா எண்ணும்
     ஒரு ஜீவனை மட்டும்
     பிரிந்து செல்கிறார்,ஆனால்
     அப்பா??, தன் மனைவி மட்டும் தன் வாரிசு என்று இரு உயிர்களை
     பிரிகிறார். அந்த பிரிவு தரும்
     இடைவெளியில்
     ஒவ்வொரு தந்தை அனுபவிக்கும்
     கல்யாணமான ப்ரம்மச்சாரி வாழ்க்கை
     மிகக்கொடுமையானது.


    அப்படி பட்ட
     அப்பாவை நாம் இன்னும்
     முழுவதுமாக
     உணரவில்லை என்பதுவே சத்தியமான.உண்மை.


    அம்மா, பிரசவ
     ஆஸ்ப்பத்திரியில்.டாக்டர்
    “சாரி சார்,ஆபரேஷன்
     பண்ணியாகனும்” ,என்று கூறும்
     பொழுது சுற்றி இருக்கும் சொந்தகள்
     பதற ,நம் அப்பா நமக்காக தன்
     மனைவியையே பணையம்
     வைகிறார்.. அம்மா ஐ.சி.யுவில்
     மறுஜென்மம் எடுக்க ,நம்
     அப்பா நம்மை நம்
     அம்மாவை எண்ணி மனதால்
     மறுஜென்மம் எடுக்கிறார்.


    நாம் பிறந்ததும், நம் தந்தை முதலில்
     நம் அம்மாவை தான்
     பார்க்கிறார். “தன்னை நம்பி
     வந்தவளை பணயம்
     வைத்ததிற்க்கு மனதால்
     மன்னிப்பு கேட்க்கிறார்” .நம் அம்மா
    “நம்ம பையன
     பாருங்க” ,என்று கூறும்பொழுது அவள்
     சுமை பாதியாக குறைகிறது.


    அதன் பின் நம்மை இந்த
     உலகத்திற்க்கு அடையாளாம்
     காட்டுவது நம் அப்பாவின்
     கடமை.அதை அவர் சரியாக
     செய்கிறார்.ஆனால் நாம்
     அவரை சரியாக
     புரிந்து கொள்கிரோமா???.


    பருவ வயது வந்ததும் நம் அப்பா சொல்லும் அட்வைஸ் நமக்கு பழிக்கிறது.
    சில நேரங்களில் எதிர்த்து பேசும் பிள்ளைகள்,
    அப்போது அப்பாவிற்கு ஏற்படும் வலி கொடுமையானது.


    தப்பா போனா அப்பா கேட்க தான் செய்வாங்க,
    உங்கள் அவப் பெயர்களையும் அவர் தானே சுமக்கிறார்,


    அப்பாவை நேசிக்க கற்றுக் கொள்
     தப்பானதை யோசிக்க கற்றுக்கொள்.

    0 comments:

    Post a Comment