Tuesday 15 July 2014

Tagged Under: ,

பழைய படக் கதையை திருடி படமெடுக்கும் லிங்குசாமி! அதிர்ச்சி தகவல்!

By: Unknown On: 22:05
  • Share The Gag
  • தமிழ் திரையுலகின் கமர்ஷியல் இயக்குனர்களின் முன்னணி வரிசையில் இருப்பவர் லிங்குசாமி. ஆனால் இந்த முன்னணி இடத்திற்கு வர ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் தன் சொந்த முயற்சியால் தான் வந்தனர்.

    இதில் லிங்குசாமி ஒவ்வொரு மேடையிலும் பாட்ஷா, தேவர் மகன் மாதிரி படமெடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அதே கதையை தான் படமாக எடுத்து வருகிறார்.

    இவர் இயக்கிய ஆனந்தம் படம் மட்டுமே ஓர் அளவிற்கு வித்தியாசமான திரைப்படம், அவர் திரைப்பயணத்தில், அதுவும் கிட்டத்தட்ட விக்ரமன் பாணி தான்.

    பிறகு இவர் இயக்கிய ரன் திரைப்படம் சாதுவான ஹீரோ எப்படி ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார் என்பது தான் கதை, இதிலும் சற்று பாட்ஷா சாயல் தெரிந்தது.

    இவர் இயக்கிய சண்டைகோழி திரைப்படத்தை கொஞ்சம் கவனித்தால் தேவர் மகன் படத்தில் விஷால், ராஜ்கிரண் நடித்தது போல் இருக்கும்.

    இதை தொடர்ந்து இவர் எடுத்த வேட்டை திரைப்படம் ஏதோ எம்ஜிஆர் படத்தின் அப்பட்டமான காப்பி என்று பேச்சு அடிப்பட்டது.

    தற்போது இவர் இயக்கி ரிலிஸ்க்கு ரெடியாக இருக்கும் அஞ்சான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது பாட்ஷா படத்தின் ரீமேக் என்று கூட சொல்லலாம். அதை அவரே ஒரு பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் அவர் பயன்படுத்து வார்த்தை இன்ஸ்பிரேஷன்.


    0 comments:

    Post a Comment