Wednesday 30 July 2014

Tagged Under: ,

ஆதளை மூலிகை.. மாயமாய் மறைய திலதம்..! சித்தர்கள் கூற்று..!

By: Unknown On: 21:12
  • Share The Gag
  • சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.

    ஆனால் இவற்றை தக்கதொரு குருவின் துணையுடன் முயற்சி செய்து பார்க்க வேண்டுகிறோம்.இந்த முறை கருவூரார் பல திரட்டில் உள்ளவை.

    ஆமாப்பா வெண்ணையிலே தேனைத்தேய்த்து
    ஆதளையின் பால் கூட்டி அடைவாய்த் தேய்த்து
    ஓமப்பா திலதமிட தன்னைக் காணார்
    ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர் காணார்
    போமப்பா வெண்டிசையுங் கால் வேகங் கொண்டு
    பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பர்
    வேமப்பா அண்டரண்டம் வழலை பட்டால்
    வேதாந்த பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே

    விளக்கம் :

    முன்பு கூறப்பட்ட வெண்ணையுடன் ,தேன் ,ஆதளை மூலிகையின் பால், இவைகளைக் கூட்டி மத்தித்து திலதமிட தன உருவம் மறைந்து விடும் . ஒருவரும் உருவத்தைக் காண முடியாது.

    எட்டு திசையும் காற்றின் வேகத்தில் சென்று வரலாம். மேலும் பூமியில் மறைந்துள்ள பொருட்களெல்லாம், புதையலெல்லாம் கண்ணில் தோன் றும். வழலைச் சுண்ணம் பட்டால் அண்டரண்டம் நீறிப் போகும்.

    0 comments:

    Post a Comment