Monday 14 July 2014

Tagged Under: ,

தமிழில் கலக்கும் சமந்தா..!

By: Unknown On: 18:17
  • Share The Gag
  • கௌதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.

    தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் மூன்று படங்களின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்குகிறார்.

    லிங்குசாமி இயக்கத்தில் சூர்யவுடன் சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் 'அஞ்சான்'. இப்படம் ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பு உறுதியாகக் கூறுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'. விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. தீபாவளி வெளியீடாக இப்படம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

    'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படம் 'பத்து எண்றதுக்குள்ள'. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடி சேருகிறார் சமந்தா. இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

    மூன்று படங்களுமே முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் படம் என்பதால் தமிழில் சமந்தா மீண்டும் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

    0 comments:

    Post a Comment