Saturday 23 August 2014

Tagged Under: ,

பழங்களை கழுவாமல் சாப்பிடுவது நல்லதா? பழங்களைச் சாப்பிடும்..?

By: Unknown On: 22:03
  • Share The Gag
  • காய்கறிகளை வாங்கி வந்தவுடன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள். நறுக்கியப் பின்பும் தண்ணீரில் அலசுங்கள்.

    * பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு, காப்பர் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம் திராட்சைப் பழங்களின் மீது வெள்ளைப் புள்ளிகளைப் பார்க்கலாம். இது காய்ந்து போன பூச்சி மருந்தின் எச்சங்கள் ஆகும். பழங்களைச் சாப்பிடும் முன் தண்ணீரில் நன்றாக அலசி சாப்பிடுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்குங்கள். அதில் கொய்யா, மாம்பழம், உதிர்த்துப் போட்ட திராட்சைப் பழங்களைச் சில நிமிடங்களுக்கு ஊற விட்டு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி பின் துணியால் துடைத்து விட்டுப் பயன்படுத்துங்கள்.

    * தோல் நீக்கி சாப்பிட வேண்டிய பழங்களைத் தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டுப் பின் தோல் உரித்துச் சாப்பிடுங்கள்.

    * ஆப்பிளின் மெழுகு பூச்சு போக, வெந்நீரில் சில வினாடிகள் ஆப்பிளைப் போட்டு வைத்து, பின் சொர சொரப்பான துணியால் அழுத்தத் துடைத்துவிட்டு (மெழுகு போன பின்) தோலுடன் சாப்பிடலாம்.

    0 comments:

    Post a Comment