Wednesday 24 September 2014

Tagged Under: ,

பாதியில் ஓடியவர் எல்லாருக்கும் கடிதம் அனுப்புகிறார்..!

By: Unknown On: 20:07
  • Share The Gag
  • சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார்.

    பின்னர், ஐ ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய அர்னால்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் பணிகளை பாராட்டி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் நான் சென்னை வந்தபோது எனக்கு சிறப்பான பாதுகாப்பு வசதி செய்து தந்ததற்கும், என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் அமர்ந்து நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றியும், உங்களது சாதனைகள் குறித்தும் விவாதித்தது அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்துவரும் சேவை என் மனதை தொட்டது. தமிழக மக்கள் உங்களை அம்மா என்று அழைப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அனைத்து பெண்கள் காவல் நிலையம் என்பது மிகவும் சிறப்பான திட்டம். இதுபோன்ற செய்தியை நான் எங்கும் கேட்டதுகூட இல்லை.

    இந்தியாவில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தில் தமிழகம் 39 சதவிகித உற்பத்தி செய்ய நீங்கள் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. காற்று மாசுபடுவதை தடுக்கும் உங்கள் முயற்சியில் நாங்களும் இணைய விரும்புகிறோம். நீங்கள் செய்துள்ள இம்முயற்சியை நான்கு வருடங்களுக்கு முன் நான் சார்ந்துள்ள கலிபோர்னியா மாகாணத்திலும் தொடங்கியுள்ளேன்.

    எனது இந்த முயற்சியில் 560 நகரங்களும் பல்வேறு மாகாணங்களும் இணைந்துள்ளன. எங்களுடன் நீங்களும் இணைந்து செயல்பட விரும்புகிறேன். எனது அதிகாரிகளை உங்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். ஏனென்றால் நமது செயல்பாடு வெறும் பேச்சோடு நின்று விடக்கூடாது.

    இதுபோன்ற தொடர்புகள் மூலம் நாம் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மிகவும் நன்றி. உங்களது சிறப்பான பணிகள் தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

    0 comments:

    Post a Comment