Tuesday 28 May 2013

Tagged Under:

"ஐ- மவுஸ்"(கண் அசைவில் இயங்கும்) - கர்நாடகா மாணவர்கள் கண்டுபிடிப்பு!!!

By: Unknown On: 12:33
  • Share The Gag










  •                              கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் உள்ள ஸ்ரீனிவாஸ் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் நான்கு பேர், கைகளால் கம்ப்யூட்டரை இயக்க முடியாதவர்கள், கண் அசைவினால் இயக்கும் வண்ணம், ஐ-மவுஸ் கருவியினைக் கண்டு பிடித்துள்ளார்கள்.




                                சுருதி செட்டிகர், பிரசாத் நாயக், வாணிஸ்ரீ, சந்தியா ஷெட் என்ற நால்வரும், தங்கள் துறையின் பேராசிரியர்களான சதீஷ்குமார் மற்றும் தலைவரான பீமா சாஸ்திரியின் துணையுடன் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்கள்.


     

                         28 m -eye mouse




                          கம்ப்யூட்டருடன் வெப் கேமரா ஒன்று பொருத்தப்பட்டு, அதனைப் பயன்படுத்துவோர் அமரும் நாற்காலியுடன் தொடர்பு கொடுக்கப்பட்டிருக்கும். ஒருவர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தொடு அசைவால் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும். வெப் கேமரா பயன்படுத்துவோரின் கண் அசைவிற்கேற்ப கம்ப்யூட்டர் இயங்கும். நாற்காலியில் உட்காரும் ஊனமுற்ற மாணவர்களால் முன்பதிவு செய்யப்பட்ட வீடியோ, கம்ப்யூட்டரை இயக்க அவர்களுக்கு உதவி புரியும் என்று இந்த மாணவர்களின் பேராசிரியர் சதீஷ்குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.




                            கண் அசைவின் மூலமே, கம்ப்யூட்டரின் எந்த செயல்பாடுகளையும் அவர்களால் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஐ- மவுசிற்கான காப்புரிமையைப் பெற்றபின் இந்தக் கருவி விற்பனைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




    ‘Eye mouse’ for the physically challenged:-

     


                   Four final-year electronics and communication engineering students have developed an ” Eye Mouse”, an input device for people who are unable to move their hands.Shruthi Shettigar, Prasad Nayak, Vanishri and Sandhya Shet of the Srinivas Institute of Technology (SIT) developed the device under the guidance of associate professor Sathish Kumar K and Bheema Shastry, head of the department of electronics and communication engineering, SIT.




     மேலும் தகவல்களுக்கு இங்கே வரவும்..





    0 comments:

    Post a Comment