Saturday 24 August 2013

Tagged Under:

தமிழ் ஜோக்ஸ்_பகுதி 2

By: Unknown On: 16:51
  • Share The Gag
  • எனக்கு மொபைல்ல கிரெடிட் ரீசார்ஜ் பண்ணனும்...
    மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...

    கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...
    கழுதை பேப்பரை சாப்பிடுது...
    மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.

    அறிவாளிகள்  என்று யாரைச் சொல்லலாம்...
    யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..

    நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?
    நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.

    என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
    என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.

    அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
    எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

    பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க
    பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு
    என்னாச்சு...
    ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ் பிள்ளையாரோட மௌஸ் ரெண்டும் சேர்ந்து விளையாடப் போயிட்டுதுகள்...

    அவன் எதுக்கு சுடுகாட்டுக்குப் போகும் போது சோப்பு எடுத்திட்டுப் போறான்..
    ஹமாம் இருக்கப் பயமேன்..

    நான் எப்போதுமே பணம் எதுவும் கையில் அதிகமாக வெச்சிருக்க மாட்டேன்...
    அதெப்படி..வெச்சிருக்கணும் என்று ஆசைப்பட்டாலும் கூட வைஃப்கிட்டே கேட்டு வாங்கிக்கட்டிக்கிறதுக்கு உங்க உடம்புல தான் பலம் கிடையாதே...

    போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறதா சொல்றீங்க, வெயிலைப் பத்தி கவலையே இல்லைங்கறீங்களே, எப்படி?
    நான் ஏ.ஸி. ஆச்சே!"

    உங்களுக்கு அலர்ஜி நோய் வந்திருக்கு... ஒத்துக்காததை எல்லாம் ஒதுக்கி வைக்கணும்!
    அப்படின்னா என் சம்சாரத்தைக் கூடவா டாக்டர்...?

    என் மாமியாருக்கு சர்க்கரை வியாதி இருக்கற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?
    உங்க வீட்ல அடிக்கடி ஸ்வீட் செய்யறதை வச்சுத்தான் சொன்னேன்...!

    ஆபீசுக்கு போகும் போது டென்ஷன் படுத்தாதே...
    ஏங்க...?அதையே நெனச்சு நெனச்சு, தூக்கமே வர மாட்டேங்குது...!

    ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க...
    ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்!
     
     

    0 comments:

    Post a Comment