Saturday 24 August 2013

Tagged Under:

ஹைக்கூக்கள்

By: Unknown On: 16:39
  • Share The Gag
  •                                   நட்சத்திரம்

                                 யார்சூட மலர்ந்திருக்கின்றன
                                விண்வெளித் தோட்டத்தில்
                                 நட்சத்திரப் பூக்கள்

    படைப்பு!

    மேகக் கவிஞன்
    மழையெனும் மையால்
    எழுதிய கவிதைக்கு
    இயற்கை இட்ட பெயர்....
    பசுமை!'

    அடடே!

    தொகுதி
    மறு சீரமைப்பு...
    மருமகளுக்கு
    மணி மகுடம்!
    மாமியாருக்கு
    முதியோர் இல்லம்.

    இந்தியாவின் ஏழ்மை

    சிக்னல்களில் நிற்கும்
    வெளிநாட்டுக் கார்களின்
    கண்ணாடிக் கதவு தட்டி
    இந்திய ஏழைகள் விற்கிறார்கள்
    காகித தேசியக் கொடி

    நிலநடுக்கம்

    விண்ணை நோக்கி
    விதவிதமான
    அடுக்குமாடி வீடுகள்!
    சுமை தாங்காமல்
    சுளுக்கு விழுந்தது
    பூமிக்கு!

    பட்டுப்புழு

    பட்டுப்புடவையில்
    வண்ணத்துப்பூச்சி
    ஓவியமாக அழுதபடி...

    அழையா விருந்தாளி

    கையசைத்து
    கூப்பிட
    மரங்கள் இல்லாததால்
    வராமல் போனது
    மழை!

    சூரியன்

    அழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்
    நடுவில் அப்படியொரு ஆர்ப்பாட்டமா?
    சூரியன்.

    கலங்கரை விளக்கு

    விடிய விடிய விழித்திருந்து
    நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
    கலங்கரை விளக்கம்

    தென்றல்

    உருவம் இல்லை
    உணர்வு உண்டு
    தென்றல்

    அக அழகு

    தோற்றத்தை விட
    குரல் அழகு
    குயில்

     நன்றி கடன்

    அடுத்த பிறவியில்  
    எனக்கு மகளாக 
    என் தாய்...

    வானவில்

                                   பறவைகளைத்
                                   தீண்டுவதில்லை
                                   வான"வில்"
                                   ஆயுதம்...

    0 comments:

    Post a Comment