Saturday 31 August 2013

Tagged Under: ,

சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!

By: Unknown On: 14:29
  • Share The Gag
  • சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 கோடி ரூபாய் செலவிலும் இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    31 - airport_

     

    அடுத்த சில நாட்களில் சென்னை, லக்னோ விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிப்பதற்கு தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் என விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சில வாரங்களில், ஜோத்பூர், குவாஹட்டி, ஆமதாபாத், கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை நிர்வகித்து பராமரித்து மேம்படுத்துவதற்கு விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

    தேர்வு செய்யப்படும் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கப்பட்டால் அவற்றுக்கு 30 ஆண்டு காலம் விமான நிலையத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் வருவாயில் பங்களிப்பு என்ற முறையில் குறிப்பிட்ட தொகையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பெறும் எனவும் ஆனால் அந்நிறுவனங்களில் ஆணையத்தின் பங்கு முதலீடு இருக்காது என்வும் தெரிய வருகிறது. 

    தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அதே சமயம் டில்லி மற்றும் மும்பையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொண்டுள்ள தலா 26 சதவீத பங்கு முதலீடு நீடிக்கும்.

    இதே போன்று ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொண்டுள்ள தலா, 13 சதவீத பங்கு முதலீட்டிலும் மாற்றம் இருக்காது என அந்த அதிகாரி மேலும் கூறினார்.


    Govt open to offering 100 % stake to private parties at six airports

    ************************************************************* 

    The Ministry of Civil Aviation will soon float request for qualification (RFQ) document for six airports, including the recently refurbished Chennai and Kolkata airports, and is open to offering 100 per cent stake to private players.

    Highly placed sources in the Aviation Ministry said the RFQ for Kolkata and Chennai airports along with four others — Guwahati, Jodhpur, Ahmedabad and Kolkata — would also be issued in the next few weeks.

    0 comments:

    Post a Comment