Sunday 25 August 2013

Tagged Under:

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!

By: Unknown On: 18:50
  • Share The Gag
  • பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!




    பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக்கின் எனப்படும் ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கணணி நிபுணர் கலீல் ஷ்ரியாதே ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

    அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளமை பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதை ஃபேஸ்புக் குழு அவதானத்தில் கொள்ளவில்லை.

    வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சினையே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    இதனால் சினம்கொண்ட கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

    தனது பெயர் கலீல் ஷ்ரியாதே என்றும் தான் தகவல் தொழில்நுட்பத்தில் கடைநிலை பட்டம் பெற்றுள்ளதாக ஜக்கர் பர்கின் பக்கத்தில் கலீல் குறிப்பிட்டுள்ளார்.

    ஜக்கர் பர்கின் www.facebook.com இணையதளத்தில் ஒரு பிரச்சினையை கண்டுபிடித்துள்ளதாகவும், அது குறித்து முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாகவும் எழுதியுள்ளார்.

    அந்த பிரச்சினை மூலம் ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொரு பயனரின் பக்கத்தில் எழுத முடிகிறது.

    தான் சாரா குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர் பர்க்குடன் ஹார்வர்டில் கல்வி கற்ற சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment