Wednesday 11 September 2013

Tagged Under:

முயற்சி வேண்டும்.........குட்டிக்கதை

By: Unknown On: 20:02
  • Share The Gag


  • ராமன் பள்ளிப்பாடங்களை சரிவர படிக்கமாட்டான்.அதனால் அவனால்...அவன் நண்பன் லட்சுமணனைப்போல அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை.

    நாளை முதல் தேர்வு ஆரம்பம்.கடவுளிடம் ராமன் ..இந்த முறை லட்சுமணனைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்குமாறு செய் என வேண்டினான்.ஆனால் தேர்வு முடிவு வந்ததும்...லட்சுமணனுக்கே அதிக மதிப்பெண்கள்.

    கோவிலுக்கு வந்த ராமன் ..'கடவுளே.. நான் உன்னை அவ்வளவு வேண்டியும் என்னை ஏமாற்றிவிட்டாயே!' என்றான்.

    ஆண்டவன் உடனே அவன் முன் தோன்றி..'ராமா..உனக்கே மதிப்பெண்கள் அதிகம் கிடைக்க வழி செய்ய நான் முனைந்தேன்..ஆனால் அதற்கு நீ படித்து..பதில்களை எழுதியிருந்தால் மட்டுமே என்னால் முடியும்.ஆனால் நீ எழுதியிருந்தவை எல்லாம் தவறு என்று தெரிந்து என்னால் எப்படி உனக்கு உதவிட முடியும்' என்றார்.

    ராமனுக்கு அப்போதுதான் தெரிந்தது...ஆண்டவனை மட்டுமே வேண்டினால் போதாது...நாமும் உழைத்து படித்திருக்க வேண்டும் என்று.

    தெய்வ நம்பிக்கை மட்டுமே இருந்தால் போதாது ஒரு செயலில் வெற்றியடைய நம் முயற்சியும் வேண்டும்.

    0 comments:

    Post a Comment