Wednesday 2 October 2013

Tagged Under:

கைகளால் பலன்...(நீதிக்கதை)!

By: Unknown On: 20:47
  • Share The Gag




  • ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....

    " இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.

    ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.

    மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.

    மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.

    நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.

    புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.

    தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...

    "நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.

    ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதை

    பிறருக்கு வழங்கி வாழ்தலுமே நன்மை பயக்கும்" என்றார்.
     
     

    0 comments:

    Post a Comment