மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள இருப்பதால் சர்வதேச திரைப்படவிழாவில் ரஜினி கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 


கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
2004 முதல் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்க விழாவில் முன்னணி நடிகர் ஒருவர் கலந்துகொண்டு துவக்கிவைப்பார். 


இந்தாண்டு இவ்விழாவினைத் துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் விழா தொடங்கும் காலத்தில் ரஜினி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவிருப்பதால் விழாவைத் துவக்கி வைப்பது சந்தேகமே என்று அவ்விழாக் குழுவைச் சேர்ந்த விஷ்ணு வாக் கூறியுள்ளார். 


மேலும் இம்முறை நடைபெறும் திரைப்பட விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இருந்து மசாலா படங்களை திரையிடப் போவதில்லை. பலதரப்பட்ட மக்களும் இதையே விரும்புவதால் இம்முடிவினை எடுத்திருக்கோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.