Thursday 28 November 2013

Tagged Under: , ,

ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய நானோ 3 டி கேமிரா!

By: Unknown On: 07:46
  • Share The Gag
  •  nov 28 -nano car

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள் நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்றது.இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது என்பது விசேஷ தகவல்.

    டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்பாதை அவ்வப்போது ஒளிபரப்புகிறார்ர்கள். அது ஒவ்வொரு முறையும் மிகவும் வியப்பாகவே இருகிறது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப் போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

    இந்த ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்ற நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள்.இதன் விலை 500 டாலர்(நம்மூர் மதிப்பில் சுமார் 32 ஆயிரம்(ஆகும்.இதில் சிற்பம்சமாக கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக அதனை கண்டுபிடிக்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம் என்பதுதான்,
    அத்துடன் மருத்துவ பயன்பாட்டிற்கும் மற்றும் கேம்ஸ்களில் பயன்படும் கருவிகளின் துல்லியத்தை அதிகரிக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது. 3டி கேமிரா வகையை சேர்ந்த இதனை எம்.ஐ.டி. ஆய்வாளர்களுடன் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர்களும் வடிவமைத்துள்ளனர்.

    இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ள இந்த கேமிரா டைம் ஆப் பிளைட் தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒளி அலைகள் ஒரு சமதள பரப்பில் பட்டு பின் அது சென்சாருக்கு திரும்பி வருவதை அடிப்படையாக கொண்டு பொருள் அமைந்திருக்கும் இடம் கணக்கிடப்படுகிறது.

    ஒளியின் வேகம் தெரியுமென்பதால் அதனடிப்படையில் ஒளி அலை பயணம் செய்து மற்றும் அது பொருளில் பட்டு திரும்பி வருவதை கேமிரா எளிதில் கணக்கிடுகிறது. இந்த கேமிராவை எம்.ஐ.டி.யின் ஆய்வாளர்கள் ரஸ்கார் என்பவர் தலைமையில் உருவாக்கியுள்ளனர்.

    0 comments:

    Post a Comment