Saturday 9 November 2013

Tagged Under: , ,

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

By: Unknown On: 23:42
  • Share The Gag
  • உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

    இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

    மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

    இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர். இதில் வெற்றி கணக்கில் 6-3 என ஆனந்த் முன்னிலையில் இருக்கிறார். 20 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

    0 comments:

    Post a Comment