Friday 8 November 2013

Tagged Under: , , ,

சீன வானில்மூன்று ஆதவன்கள்!!

By: Unknown On: 16:58
  • Share The Gag
  • சீபெங் நகரில் நடந்த விண்வெளி அற்புதத்தில் காணப்பட்ட மூன்று சூரியன்கள் 
     
    சீனாவின் வடக்குபகுதியில் உள்ள உள்மங்கோலியா சுயாட்சி பகுதி மக்கள் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வை காண்பதற்காக வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். வானில் ஒரே நேரத்தில் தெரிந்த மூன்று சூரியன்கள்தான் அவர்களது வியப்புக்கு காரணாமாகும். 


    காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனும் அதன் இரட்டை உடன்பிறப்புகளான சிறிய சூரியன்களும் திடீரென்று முளைத்தன.


     இவை மூன்றும் வானவில் போன்ற ஒளிவட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன. சீபெங் நகரில் தோன்றிய இந்த அற்புத நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது.


    இந்த அற்புத விண்வெளி நிகழ்வை ஏராளமானவர்கள் தங்கள் புகைப்படக்கருவி அல்லது வீடியோ கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். நகரின் சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாக சிலர் கூறினர். 


    இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீபெங் வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கு பேண்டம் சன் என்றும் ஐஸ்ஹேலோ என்றும் பெயர்கள் உண்டு என்று அது கூறியது.


     வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில்ஊருடுவும் ஒளிச்சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார்.

    0 comments:

    Post a Comment