Sunday 24 November 2013

Tagged Under: ,

மாமியார் குறுக்கீடு பிடிக்காததால் தனிகுடித்தனம் போகிறார் ஐஸ்!

By: Unknown On: 12:43
  • Share The Gag
  •  

    மாமியார் ஜெயா பச்சனின் குறுக்கீடு அதிகரித்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு அவருடன் மும்பையில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார் ஐஸ்வர்யாராய். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார் ஜெயா பச்சன் தலையிடுவதாக கூறப்படுகிறது. மாமானார் அமிதாப்பச்சன் தன் வேலை உண்டு, பேத்தி உண்டு என்று மவுனமாக இருப்பதால் அவர் மீது ஐஸ்வர்யாவுக்கு வருத்தம் எதுவும் இல்லையாம்.

    சமீபத்தில் விழா ஒன்றுக்கு மாமியார் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஐஸ்வர்யாவை படம் பிடிக்க போட்டி போட்டனர். வேகமாக சென்ற ஐஸ்வர்யாவை போஸ்தர சொல்வதற்காக, ஐஸ்வர்யா... ஐஸ்வர்யா.. என்று மீடியாக்காரர்கள் குரல் கொடுத்தனர். இதைகேட்டு ஜெயா பச்சன் கோபம் அடைந்தார்.

    ஐஸ்வர்யா என்ன உங்க கிளாஸ்மேட்டா என்று மீடியா நபர்களை கடிந்துகொண்டார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோதும் அதை ஏற்காமல் தவிர்த்து வருகிறார் ஐஸ். இதற்கும் மாமியார் தலையீடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து கணவருடன் சீக்கிரமே ஐஸ்வர்யா தனிகுடித்தனம் செல்வார் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்டுப்பாடுடன் குடும்பத்தை நடத்த விரும்பும் ஜெயாவுக்கு ஐஸ்வர்யாவை அபிஷேக் திருமணம் செய்ததே பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment