Thursday 21 August 2014

Tagged Under: , , , ,

ஆனந்தம் என்பது எது தெரியுமா?

By: Unknown On: 18:08
  • Share The Gag

  • * தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
     வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
     நெறிமுறையாகும்.


     * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
     குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
     குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
     முடியாமல் தவிப்பார்கள்.


     * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
     இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
     கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
     மாட்டீர்கள்.


     * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
     செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
    ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
    இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
     ஆரம்பித்து விடுவீர்கள்.


     * துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
    எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
     காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
     உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
     முடியாது.

    0 comments:

    Post a Comment