Monday 16 December 2013

Tagged Under: , , , ,

புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம்?

By: Unknown On: 01:23
  • Share The Gag


  • நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...


    ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

    பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

    ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.

    பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

    ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

    பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

    ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

    பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

    ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

    பெண்: நீ என்னை அடிப்பாயா?

    ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

    பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

    திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்...

    0 comments:

    Post a Comment