Sunday 22 December 2013

Tagged Under: , , , ,

சிந்தனைகள் சில........?

By: Unknown On: 01:35
  • Share The Gag



  • நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
    நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...

    உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
    அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...

    சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
    மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

    உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
    உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக
    ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...

    உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்
    பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு
    அந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...

    உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்
    மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்
    என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...

    உங்களை நீங்களே தூய்மையாக
    பிரகாசமாக வைத்து கொள்வது நல்லது...
    உலகை நீங்கள் காண உதவும் ஜன்னல் நீங்கள் தான்...

    அச்சம் வரும்போதேல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள்...
    நம்பிக்கையின் உயரம்... அச்சத்தின் உயரத்தை விட அதிகமாய்
    இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

    உங்கள் வாழ்கைக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதரும்...
    ஒன்று உங்களுக்கு எதாவது கற்றுகொடுக்க வந்திருக்கிறார்...
    அல்லது - உங்களிடமிருந்து எதாவது கற்று கொள்ள வந்திருக்கிறார் ..

    சோம்பேறித்தனம் என்பது பணம் மாதிரி...
    உங்களிடம் அது நிறைய இருக்க இருக்க மேலும் மேலும்
    வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்...

    சந்தோஷத்தைத் தேடி இந்த உலகில் அலைகின்றனர்
    அது உங்கள் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது
    திருப்தியான மனம் எல்லாருக்கும் அதைத் தருகிறது...

    நம்முடைய காலகட்டத்தில் புனிதத்துவத்தை
    நோக்கிச் செல்லும் பாதை செயல் உலகின்
    ஊடகச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்...

    நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால்... சோம்பேறி...
    இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்... சுருசுறுப்பானவர்...
    நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால்... வெற்றியாளர்...

    0 comments:

    Post a Comment