Sunday 8 December 2013

Tagged Under:

பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!

By: Unknown On: 23:21
  • Share The Gag

  • பாரதி இதைப் பார்த்திருந்தால்
     தலைப்பாகையை கழற்றிவிட்டு
     தண்டவாளத்தில் படுத்திருப்பான் !


    கோவா கடற்கரை
     அலைகளில் இருக்கும் கேவலம்
    மெரினா கடற்கரை
     அலைகளிலும் கலக்கிறதா ?


    காதலர் என்ற பெயரில்
     இந்த சதைப் பிராணிகள் சிலது
     தற்கொலை செய்து கொள்கின்றன.
    மரணம் இவர்களால்
     அசிங்கப்பட்டுப் போகிறது.


    அலைகள் விளையாடி
     ஆனந்தம் நிறைந்த
     மெரினா கடற்கரையா ?
    காம விளையாட்டுச்
     சிற்பங்கள் நிறைந்த
     கஜுராஹோ கோயிலா ?


     ' காதாலாகி... கசிந்துருகி...
    கண்ணீர் மல்கி'
    என்று எழுதியவன்
     எழுதிய விரல்களை
     வெட்டிக் கொள்வான்.

    0 comments:

    Post a Comment