Sunday 29 December 2013

Tagged Under: ,

ரஜினி பிறந்தநாள்னா ஏன் எங்கிட்ட வர்றீங்க? குஷ்பு ஆவேசம்

By: Unknown On: 19:08
  • Share The Gag




  • ரஜினியின் பிறந்தநாளுக்கு  தமிழகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் ஆங்காங்கே வினைல் போர்டுகள் வைத்து இனிப்புகள் வழங்கி சந்தோஷத்தில் திளைக்க கிளம்பிவிட்டார்தகள்.
    ஆனால் பத்திரிகை நிருபர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி சம்பந்தமாக யாரிடம் பேட்டி கேட்டாலும், இப்போ பிஸியா இருக்கேன் என்று கூறியே தப்பிக்கிறார்களாம். ரஜினியோடு ஜோடியாக நடித்த நடிகைகளை மட்டுமாவது தேடிப்பிடித்து பேட்டியெடுத்துவிடலாம் என்று அலைந்து திரிந்த ஒரு நிருபருக்கு நேர்ந்த கதி பரிதாபம்.

    ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா என்று பலரையும் தேடி தொலைபேசியில் பிடித்துவிட்டார் அவர். இரண்டு வரி ரஜினி சாரை பற்றி சொல்லுங்க என்று கேட்டதுதான் தாமதம். நான் பிஸியா இருக்கேன். நானே கூப்பிடுறேன் என்ற போனை கட் பண்ணியவர்கள்தானாம். அதற்கு பிறகு அவர்களாகவும் அழைக்கவில்லை. இவர் அழைத்தாலும் எடுக்கவில்லை. நடிகை குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். ஏன் எப்ப ரஜினியை பற்றி நீங்க எழுத நினைச்சாலும் எனக்கு போன் அடிக்கிறீங்க? அவருக்கு பிறந்த நாள்னா கொண்டாடிட்டு போங்க. ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க என்று கேட்க, ஸாரி என்று போனை வைக்க வேண்டியதாயிற்று நிருபருக்கு.

    சுஹாசினி கேட்ட கேள்வி நியாயமா, அநியாயமா என்று வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். என் பர்த்டேவுக்கு அவர்கிட்ட வாழ்த்து கேளுங்க. கொடுப்பாரா? பிறகு என்கிட்ட மட்டும் எதுக்கு கேட்கிறீங்க? ஆளை விடுங்க என்றாராம். சரி, யாருமேவா ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை? சொன்னார்களே... ஜெயச்சித்ரா, அம்பிகா, ராதா, சீதா இவர்கள் மட்டும். மீனா கூட, பிறகு பேசுறீங்களா என்று போனை வைத்துவிட்டதாக தகவல்.

    இப்படியொரு நிலைமையா ரஜினியின் இமேஜுக்கு?

    0 comments:

    Post a Comment