Monday 28 July 2014

Tagged Under: ,

இனி இண்டர்நெட் மூலம் முத்தமிட்டு கரங்களைப் பற்றிக்கொள்ள முடியும்..!

By: Unknown On: 20:09
  • Share The Gag
  •  பிரியமானவர்களிற்கு  தொலைதூரத்தில்  இருந்தும்  கைகொடுத்து  தங்கள்ளது உணர்வினை வெளிப்படுத்த  கூடிய  கருவியை நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணத்தை உருவாக்கியுள்ளனர்.

    இனி இண்டர்நெட் மூலம் முத்தமிட்டு கரங்களைப் பற்றிக்கொள்ள முடியும்

    இண்டர்நெட் மூலம் முத்தமிட கருவி கண்டு பிக்க பட்டது நினைவு வரலாம்  பொதுவாக  ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது

    கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.

    தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘மிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.இந்த உபகரணத்தை ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.மேற்படி ஒரு சோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 99 அமெரிக்க டொலராகும்.

    0 comments:

    Post a Comment