Tuesday 22 July 2014

Tagged Under: ,

குஷ்பு தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமானுடன் சிவகார்த்திகேயன்..!

By: Unknown On: 21:04
  • Share The Gag
  • குஷ்புக்கு இப்போ அதிஷ்டகாற்று வீசுதுபோல. அஜீத்தை வைத்து குஷ்பு படம் தயாரிக்க விரும்பியதாகவும், இது தொடர்பாக அஜீத்திடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.ஆனால் குஷ்புக்கு கால்ஷீட் கொடுத்தால் தேவையில்லாத பிரச்னைகள் வருமோ என்று அஞ்சிய அஜீத்
    காலம் தாழ்த்தியதாகவும் கூறப்பட்டது.காரணம் அவர் சார்ந்திருந்த கட்சியே.இதனால்தான் குஷ்பு கட்சியை விட்டு வெளியேறியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் அஜீத்தின் பார்வை தங்கள் பக்கம் இல்லை என்பதை உணர்ந்த குஷ்பு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாராம்.

    தற்போதைக்கு நல்ல வரவேற்பில் உள்ள சிவகார்த்திகேயனை அணுகினால் என்ன என்று யோசித்தாராம். அவரது கனவிற்கு புத்துயிர் கொடுத்துள்ளார் ஹன்சிகா. இந்த விசயத்தில் ஹன்சிகா ரிஸ்க் எடுக்க காரணம் குஷ்புடன் நல்ல நெருக்கமே காரணம்.நான் பார்த்துக்குறேன் இந்த விசயத்தை என்று கூறியது மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனிடம் அதனை தெரிவித்தாராம்.ஹன்சிகா சொல்லி மாட்டேன் என்பாரா? சம்மதம் தெரிவித்தாராம் அவர். ஆனால் ஒரு நிபந்தனையுடன்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவேண்டும் என்றாராம்.

    தங்க புதையலே கையில் கிடைக்கபோகுது. இந்த ரிஸ்க நான் எடுக்குறேன் என்ற குஷ்பு இது குறித்து ராஹ்மானிடம் பேச, சிவா மீது தனி பட்ட முறையில் நல்ல மரியாதை வைத்திருக்கும் ரஹ்மான் உடனே சம்மதம் தெரிவித்தாராம். இனி ஒரு சுயோக தினத்தில் பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்க வேண்டியதுதான் பாக்கி. கதாநாயகி குஷ்புவுக்கு இந்த வாய்ப்பை பெற்றுதந்த ஹன்சிகாவாகத்தான் இருக்கும்.

    0 comments:

    Post a Comment