Saturday 9 August 2014

Tagged Under: ,

வரலட்சுமி பூஜைக்கு வேண்டிய ஸ்பெஷல் ரெசிபிக்கள்!

By: Unknown On: 19:25
  • Share The Gag
  • வரலட்சுமி பூஜையை திருமணமான பெண்கள் செய்து வருவார்கள். இந்த பூஜையை செய்வதால் பொன்னும் பொருளும் வீட்டில் எப்போதும் குடிக்கொண்டிருப்பதுடன், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

    இந்த வரலட்சுமி பூஜையை முன்னிட்டு சிலர் காலையில் பூஜையை செய்வார்கள். ஆனால் பெரும்பாலானோர் மாலையில் மகாலட்சுமியை அலங்கரித்து, 9 படையல்களை செய்து, பூஜை செய்து, சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு, தம்மால் முடிந்ததை கொடுத்து அனுப்புவார்கள்.

    இந்த பூஜை செய்பவர்கள் வீட்டில் கீழே கொடுக்கப்பட்ட படையல்களை படைக்கலாம்!

    கேசரி

    பொதுவாக பண்டிகை என்றால், இனிப்புக்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் அனைவரும் செய்யும் ஒரு இனிப்பான ரெசிபி தான் கேசரி. இதை கூட பூஜையின் போது மகாலட்சுமிக்கு படையலாக படைக்கலாம்.

    பாசிப்பருப்பு பாயாசம்

    பாயாசம் ஒரு சிறப்பான படையல் படைக்கும் உணவுப்பொருள் என்று சொல்லலாம். சவ்வரிசி பாயாசத்தை விட பாசிப்பருப்பு பாயாசம் செய்யலாம்.

    எலுமிச்சை சாதம்

    எலுமிச்சை சாதம் கூட செய்யலாம். மேலும் இது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்ததும் கூட. எனவே இதனை பூஜையின் போது செய்து படைப்பது நல்லது.

    உளுந்து வடை

    வடை கூட வரமகாலட்சுமி பூஜையின் போது செய்யக்கூடிய படையல்களுள் ஒன்றாகும். இதனையும் சேர்த்து படைக்கலாம்.

    முறுக்கு, அதிரசம்

    கடவுளுக்கு படைக்கும் படையல்களுள் முறுக்கு மற்றும் அதிரசம் மிகவும் முக்கியமானது. அதிலும் மகாலட்சுமிக்கு முறுக்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இதை தவறாமல் செய்து படையுங்கள்.

    0 comments:

    Post a Comment