Tuesday 12 August 2014

Tagged Under: ,

மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் 'யாருமில்லா' பாடல்.. சூப்பரோ சூப்பர்..!

By: Unknown On: 18:33
  • Share The Gag
  • சித்தார்த், பிரித்விராஜ் நடித்து வரும் காவியத் தலைவன் படத்தின் யாருமில்லா தனியரங்கில் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல் தான் தற்போது ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

    வசந்த பாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாஸர் நடித்து வரும் படம் காவியத் தலைவன். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பணியை கவனிக்கிறார். இந்நிலையில் படத்தில் வரும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே என்று துவங்கும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் 'யாருமில்லா' பாடல்: ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிறது

    இந்த பாட்டு தான் தற்போது ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ரஹ்மானின் இனிய இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல் கேட்டதுமே மனதில் பதிந்துவிடும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு பாடலுக்கே இப்படி அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வரும் 18ம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. யாருமில்லா பாடலின் இசை மனதை மயில் இறகால் வருடுவது போன்று உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆக காவியத் தலைவன் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டான்.

    0 comments:

    Post a Comment