Friday 23 August 2013

Tagged Under:

நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!

By: Unknown On: 07:51
  • Share The Gag

  • நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!

    "டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

    "ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
    -----------------------------------------------------------------------------------------------------------
    "அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
    "ஏன்...?"
    "அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
    -----------------------------------------------------------------------------------------------------------
    "மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?"
    "அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"
    -----------------------------------------------------------------------------------------------------------
    "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
    "அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் ஐயாயிரம். வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
    "என்ன வேலை?" "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார்!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
    "அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
    "அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?" "பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே..."
    "அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"
    -------------------------------------------------------------------------------------------------------------
    "பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க...?"
    "குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!"
    -------------------------------------------------------------------------------------------------------------
    "தினமும் கீரையே வாங்கிட்டுப் போறீங்களே... உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?"
    "அவர் ஒரு வாயில்லாப் "பூச்சி"ங்க... அதான்!"
    --------------------------------------------------------------------------------------------------------------
    "டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
    "ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "போலீஸா இருந்த நான் சாமியாரா ஆகியிருக்கக் கூடாது!"
    "ஏன் சாமி?"
    "எல்லாரும் போலீஸாமியார்"னு சொல்றாங்களே!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
    "ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு..."
    "ஏன் சார்..?"
    "கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"
    ------------------------------------------------------------------------------------------------------------
    "இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..."
    "தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா"
    -------------------------------------------------------------------------------------------------------------
    "அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?"
    "எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!"

    0 comments:

    Post a Comment