Friday 23 August 2013

Tagged Under:

கவிதைகள்!

By: Unknown On: 17:35
  • Share The Gag
  • கவிதைகள்

    வாழ்க்கை

    இன்று
    தவறிவிடும்
    லட்சியக்குறி
    நாளை
    காத்திருக்கும்
    கேள்விக்குறியாம்!
     

    புன்னகை
    பொதி சுமக்கும்
    கழுதை
    சிரித்தது...
    முதுகில்
    சுமையோடு
    பள்ளிக்கு போகும்
    குழந்தை!
     
    கடவுள்
    யார் சொன்னது
    கடவுள் இல்லையென்று?
    பார்த்தோம்...
    சிரித்தோம்...
    மகிழ்ந்தோம்...
    ஒரே வீட்டிலும்
    வாழ்ந்தோம்
    பெற்றோரை
    கடவுளுக்கு மேலாக நினைத்து...

    தேசிய கீதம்
    அரசியல்வாதிகளை
    நாற்காலியை விட்டு
    எழச் செய்து விடுகிறது
    தேசிய கீதம்

    நிலநடுக்கம்
    விண்ணை நோக்கி
    விதவிதமான
    அடுக்குமாடி வீடுகள்!
    சுமை தாங்காமல்
    சுளுக்கு விழுந்தது
    பூமிக்கு!
      
    ஒற்றுமை
    அருகருகே இருந்தாலும்
    முட்டிமோதாது சுழலும் சமாதானம்
    மின்விசிறி!
     
    வெளிநாட்டு வேலை
    உறவுகள் தொலைத்து
    கனவுகள் சுமந்து
    காற்றினில் கலந்து
    எல்லைகள் கடந்து
    வந்தேன் இங்கு...
    கிடைத்தது என்னவோ
    இலவச காற்று மட்டும்தான்

    0 comments:

    Post a Comment