Friday 23 August 2013

Tagged Under:

மூன்று என்ற சொல்லினிலே...

By: Unknown On: 18:58
  • Share The Gag

  • மூன்று என்ற சொல்லினிலே...

    மிகக் கடினமானவை மூன்றுண்டு:
    1. இரகசியத்தை காப்பது.
    2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
    3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.


    நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:
    1. இதயத்தால் உணர்தல்.
    2. சொற்களால் தெரிவித்தல்.
    3. பதிலுக்கு உதவி செய்தல். 

    மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:
    1. சென்றதை மறப்பது.
    2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
    3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

     
    இழப்பு மூன்று வகையிலுண்டு:
    1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
    2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
    3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

     
    உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:
    1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
    2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
    3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

    0 comments:

    Post a Comment