Friday 20 September 2013

Tagged Under:

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு!

By: Unknown On: 18:15
  • Share The Gag


  • இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    பணி: ஜூனியர் அசிஸ்டன்ட்


    மொத்த காலியிடங்கள்:
    100

    வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

    sep 21 Airports-Authority-India.
    சம்பளம்: ரூ.12,500 – 28,500

    கல்வித்தகுதி:

    பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். மேலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செய்யப்படும் முறை:


    எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் மெஷர்மெண்ட், டிரைவிங் டெஸ்ட், எண்டியூரன்ஸ் டெஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்
    :

    ரூ.400. இதனை Airports Authority of India என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை
    :

    www.airportsindia.org.in,  www.aai.aero  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    The Regional Executive Director, Airports Authority of India, Northern Region, Operational Office, Rangpuri, Gurgaon Road, New Delhi – 110037

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:    

    15.10.2013 மேலும் உடற்தகுதி உள்ளிட்ட முழு விபரங்கள் அறிய www.airportsindia.org.in/employment_news/Advertisement_fire.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    0 comments:

    Post a Comment