Monday 30 September 2013

Tagged Under: ,

மிரட்டும் மெட்ராஸ் ஐ!

By: Unknown On: 19:29
  • Share The Gag

  • கோடை காலம் வந்தாலே உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் வேகமா பரவும். இதுல குறிப்பா மக்கள தாக்குற நோய் மெட்ராஸ் ஐ தான். ஆனா என்னவோ சம்மர் முடிஞ்சு, 3 மாசம் ஆகியும் சிட்டிவாசிகளை இந்த நோய் மிரட்டிட்டு வர்ருது. டெய்லி 15 பேராவது மெட்ராஸ் ஐ அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வர்றதா அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் சொல்றாங்க.


    மெட்ராஸ் ஐ என்ற நோய் ஒருவித வைரஸ் மூலம் பரவுகிறது. கண்வீக்கம், எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் மற்றும் சிவப்பாகுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களிடம் மிகவும் எளிதாக இந்த நோய் பரவுகிறது. குறைந்தது இந்நோயின் தாக்கம் ஒரு வாரம் நீடிக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



    இதுகுறித்து கண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மழைக்காலம் தொடங்கிய பிறகும் மெட்ராஸ் ஐ சிட்டியின் சில இடங்களில் பரவிட்டு வருது. இதில் பாதிக்கப்பட்ட 40 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கும், 30 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக செல்கின்றனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் சுய சிகிச்சை அளித்துக் கொள்கின்றனர். மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். கண் சிவப்பாகுதல், கண்ணில் நீர்வடிதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். பொதுவாக இந்த நோய் காற்று மற்றும் தண்ணீர் மூலமாக பரவுகிறது. 



    இந்நோய் வராமல் இருக்க அடிக்கடி சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். மேலும் முன்தினம் இரவு சுமார் 15 நிமிடம் சூடு வைத்த தண்ணீரை கொண்டு மறுநாள் காலையில் கண்களை சுத்தம் செய்வது நல்லது. ஃபில்டர் வாட்டரை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ஃபில்டர் வாட்டரில் பாக்டீரியாக்கள் இருக்காது. ஆனால் அதில் வைரஸ்கள் இருக்கும் என்கிறார்.  அதானல உங்க கண்களை ஜாக்கிரதையா பார்த்துக்குங்க!

    0 comments:

    Post a Comment