Monday 30 September 2013

Tagged Under:

கடவுள் பக்தி (நீதிக்கதை)!

By: Unknown On: 07:06
  • Share The Gag



  • ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

    நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

    ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

    என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

    அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

    நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

    நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

    இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

    அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

    பசியை எப்படி காட்டமுடியும்.

    அதன் நிறம்.

    பசிக்கு ஏது நிறம்.

    அதன் குணம்.

    குணம் இல்லை.

    உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

    அது வந்து....அது வந்து..

    எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

    கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

    நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.

    0 comments:

    Post a Comment