Sunday 15 December 2013

Tagged Under: , , , , ,

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2

By: Unknown On: 11:29
  • Share The Gag


  • இரண்டாம் பகுதி


    கட்டுரையின் முதல் பகுதியில் முன்னுரை கொடுத்திருக்கிறேன். முதல் பகுதியையும் ஏனைய பழமொழிக் கட்டுரைகளையும் படிப்பது பயன் தரும்.


    வாழுகிற பெண்ணும் வாழாத பெண்ணும்


    மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி
    மெலிந்தவளுக்கு மெத்தப் பலன், மேனி மினுக்கெட்டவளுக்கு மெத்தக் கசம்
    மேலைக்குத் தாலி கட்டுகிறேன்,, கழுத்தே சுகமே இரு என்றார்போல
    மேலைக்குத் வாழ்க்கைப்படுகிறேன்,, கழுத்தே சுகமே இரு
    மேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்
    மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்
    வரப்பு ஏறித் தாண்ட மாட்டாள், அவள் பேர் தாண்டாய் (110)
    வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்
    வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு
    வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்
    வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்
    வாலிபத்தில் இல்லாத மங்கையை வயது சென்றபின் என்ன செய்கிறது?
    வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயது போனபின் தேடப்போகிறாளா?
    வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
    வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே
    வாழாப் பெண் தாயோடெ
    வாழுகிற பெண்ணை தாய் கெடுத்தது போல
    வாழைப் பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள் (120)
    வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்


    கைம்பெண்சாதி, எருமையில் கறவை பழகினாற் போல
    கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம்
    கைம்பெண்டாட்டி பெற்ற கழிசடை
    கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி
    கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளையானாலும் செய்யுஞ் சடங்கு சீராய் செய்யவேண்டும்
    எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்
    எட்டும் இரண்டும் தெரியாத பேதை (நாத்தை)
    ஒரு வீடடங்கலும் பிடாரி/ பஜாரி
    ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போகிறது, பரியம்போட்ட பெண்ணைப் பார்த்து வளர்
    ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம் (130)
    ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை
    ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்
    ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா?
    ஆமுடையானைக் கொன்ற அறநீலி
    ஆமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
    ஆமுடையான் அடித்ததது பெரிதல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
    ஆமுடையான் செத்த பின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது
    ஆமுடையான் செத்தபோதே அல்லலுற்ற கஞ்சி
    ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவேன்?


    சீதேவியும் மூதேவியும்



    சீதை பிறக்க இலங்கை அழிய (140)
    சீதேவியுடன் மூதேவி பிறந்தாற் போல
    சீராளன் கல்யாணத்தில் முன்றுபேர் பெண்டுகள் மாரோடே மார் தள்ளுது
    சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலெ பாரியைப் பறிகொடுத்தது போல
    சீர்கேடனுக்குக் வாக்குப்பட்டு திரிச்சீலை துணிக்கு வாதைப் படாமல் இருந்தேன், சீராளனைப் பெற்ற பிறகு திரிச்சீலை துணிக்கு வருத்தமாச்சுது
    சீலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்
    நாட்ட ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது
    நாணம் இல்லாத சிறுக்கிக்கு நாலு திக்கும் வாசற்படி
    நாணம் இல்லாத வாத்தி நாலு திக்குக்கும் கூத்தி
    நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்
    பூவுள்ள மங்கையாம் பொற்கொடியாம் , போன இடமெல்லாம் செருப்படியாம் (150)
    பூ விற்றவளை பொன் விற்கப் பண்ணூவேன்


    பெண்சாதி


    பெண்சாதி இருந்தால் புது மாப்பிள்ளை
    பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல
    பெண்சாதி கால் விலங்கு, பிள்ளை சுள்ளாணி
    பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு
    பெண்சாதி சொந்தம், போகுவரத்துப் புறம்பே
    பெண்சாதி பேச்சைக் கேட்டவன் பேய் போல அலைவான்
    பெண்சாதி முகத்தைப் பார்க்காவிட்டாலும், பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும்
    பெண்சாதியைக் குதிரை மேல் ஏற்றி, பெற்ற தாயின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலம்
    பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு (160)
    பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது
    பெண்டாட்டி குதிர் போல அகமுடையான் கதிர்போல
    பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவாருண்டோ
    பெண்டுகளுக்கு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பில்லை
    பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்திடும்
    பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்
    பெண்டுகள் சோற்றுக்குத் தண்டமில்லை
    பெண்டுகள் வைத்தியம்
    பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு
    பெண் அரம்பைக் கூத்து போய், பேய்க் கூத்து ஆச்சுதே (170)
    பெண் ஆசை ஒரு பக்கம், மண் ஆசை ஒரு பக்கம்
    பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது
    பெண் ஆணையைத் தொடரும் பேரானையைப்போல
    பெண்ணின் குணமும் அறிவேன், சம்பந்தி வாயும் அறிவேன்


    தங்கமே தங்கம்

    பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
    பெண்ணுக்கு ஒரு கும்பிடு வில்லுக்கு ஒரு கும்பிடு
    பெண்ணின் குணம்தான் சீதனம்
    பெண்ணின் பெண்தான் சீதனம்
    பெண்ணுக்கு பொன்னிட்டுப் பார், சுவருக்கு மண்ணிட்டுப் பார்
    பெண்ணுக்கு பொன்னாசை கொள்ளும் பேரணங்கு 180
    பெண்ணுக்கு போட்டுப் பார், மண்ணுக்குப் பூசிப்பார்
    பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
    பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்
    பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
    பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லாமல் பெருமரம் போல் வளருகிறது
    பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள், பிள்ளை பெறுவதற்குப் பிணைபடுவார்களா?
    பெண்ணைக் கொண்டு பையன் போனான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்
    பெண்ணைத் திருத்தும் பொன் (190)
    பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?
    பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு
    பெண் என்று பிறந்தபோதே புருடன் பிறந்திருப்பான்
    பெண்ணோடு ஆணோடு பிறக்காத பெரும்பாவி
    பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?
    பெண் புத்தி கேட்கிறவன் பேய்
    பெண் மூப்பான வீடு பேரழிந்துபோம்
    பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
    பொன்னாலே மருமகளானாலும், மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்
    பொன்னையும் புடவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு (200)
    போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து கந்தை அற்றாள்...............

    0 comments:

    Post a Comment