Sunday 15 December 2013

Tagged Under: , ,

காயத்ரி மந்த்ரம் ...

By: Unknown On: 00:50
  • Share The Gag



  • காயத்ரி என்றால்,எவரெல்லாம் தன்னைக் கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரஷிப்பது என்பது அர்த்தம் ..
    காயந்தம் த்ராயதே யஷ்மத் காயத்ரி (இ) த்யபிதீயதே

    கானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவது என்று அர்த்தம் இல்லை
    யார் தன்னை பிரேமையுடனும் பக்தியுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்த்ரம் ரஷிக்கும் .



    ஓம் பூர் புவ: ஸுவ:
    தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ யோன: ப்ரசோதயாத்

    என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.


    இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.


    இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.


    தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
    பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.


    மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
    ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.


    பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
    தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.


    பின் மூச்சை வெளிவிட்டபடி
    பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்


    இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
    தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

    இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

    0 comments:

    Post a Comment