Sunday 5 January 2014

Tagged Under: ,

சிம்புவை அலைய விடும் ஹன்சிகா..!

By: Unknown On: 00:27
  • Share The Gag





  • காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். அதோடு, அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும், பின்னாடியே தானும் பறந்து விடுவார்.

    அப்படிப்பட்ட சிம்பு இப்போது இரண்டாம் கட்டமாக ஹன்சிகா மீது காதல் தொடுத்திருக்கிறார். இந்தமுறையும் அவரது காதல் ரொம்ப உறுதியாக இருக்கிறது. அதனால் முதல் காதலுக்கு எந்த குறைவும் இல்லாமல் இந்த முறையும் ஹன்சிகாவை ஒரு நாளைக்கு ஒரு தடவை பார்க்கா விட்டாலும் துடித்துப்போகிறாராம்.

    ஆனால், அவரது காதலின் வேகத்தை தெரிந்து கொள்ளாத ஹன்சிகாவோ, அடிக்கடி அவருக்கு டேக்கா கொடுத்து வருகிறாராம். உள்ளூரில் படப்படிப்பில் இருக்கும்போதும் அவர் ஸ்பாட்டுக்கு வந்து தொந்தரவு செய்வார் என்று போனையே சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். அதேபோல் அவுட்டோர் செல்லும்போது சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப்பாகி விடுகிறாராம்.

    இதனால், காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்று மனதுக்கு தோன்றி விட்டால், மேற்படி பட நிறுவனத்தை அணுகி விசாரித்துக்கொண்டு அவுட்டோருக்கு சென்று அம்மணியை ஆசைதீர பார்த்து ரசிக்கிறாராம் சிம்பு. இப்படி வந்த இடத்தைகூட தனக்கு சொல்லாமல் டீலில் விடுகிறாரே ஹன்சிகா என்ற கோபம் கொஞ்சம்கூட அவருக்கு வரவில்லையாம்.

    0 comments:

    Post a Comment