Sunday 5 January 2014

Tagged Under:

ஆக்ஸிஜன் பயன்பாடு…

By: Unknown On: 01:40
  • Share The Gag


  • ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள்
    மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன்
    இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது.

     நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில்,
    சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே
    பயன்படுத்துகிறது.

     சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன்
    கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற
    நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில்
    மூளையின் செல்கள் இறந்து, மனிதன் மரண நிலைக்குத்
    தள்ளப்படுகிறான்.

     இருப்பினும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மனித
    மூளைக்கு மிகக் குறைந்த ஆக்ஸிஜன் போதுமானது.
    காரணம், மிகக் குறைந்த வெப்பநிலையில்
    மூளையானது மிகக் குறைந்த ஆக்ஸிஜனையே
    உபயோகிக்கிறது.

     எனவே, நீண்ட நேரம் நடைபெறும் அறுவை சிகிச்சைகள்
    மிகக் குறைந்த வெப்பநிலையில் செய்யப்படுகிறது.
    காரணம், மிகக் குறைந்த ஆக்ஸிஜன் பயன்பாட்டில்
    அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துவிட இயலும்.

     மனித மூளையைத் தவிர மற்ற உறுப்புகள் ஆக்ஸிஜன்
    இல்லாமலும் சில மணி நேரம் செயல்படுகின்றன.
    எனவேதான், இறந்த மனிதனது மூளையைத் தவிர,
    மற்ற சில உறுப்புகள் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்
    பயன்படுத்தப்படுகின்றன.

    0 comments:

    Post a Comment